Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
காஞ்சிபுரம்: சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் ஏராளமானோர் நகராட்சி அதிகாரிகளிடம் மனுக்களை அளித்தனர்.
இதில் கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம்,ஆதிநகர் பகுதியில் உள்ள 1500 பிற சாதியினரும் ,800 தாழ்த்தப்பட்ட குடும்பங்களும் 60 வருடங்களாக வசித்து வருகின்றனர். இது வரை அவர்களுக்கு பட்டா வழங்காமல் கிராம நத்தமாக இருந்த இடத்தை நீர் பிடிப்பு பகுதியாக மாற்றி விட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
இதனால் தங்களால் குழந்தைகள் படிப்பிற்க்காக வங்கி கடன்கள் வாங்க முடியால் தவித்து வருவதாக கூறினர் இதையனைஅடுத்து முகாமிற்க்கு வந்த அப்பகுதி மக்கள் தங்களுக்கு உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு குறை தீர்வு திட்டத்தின் மூலம் பட்டா வழங்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளிடம் மனுவை அளித்தனர்.